ADDED : ஜூலை 13, 2024 10:19 PM

வத்திராயிருப்பு:விருதுநகர்மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முகமது பாதுஷா 54.
இவர் தம்பிபட்டியில் கயிறு மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் நேற்றிரவு 8:00 மணிக்கு பணியாளர்கள் இருவர் வேலை செய்யும்போது, தேங்காய் மட்டையிவிருந்து கயிறு திரிக்க வைக்கப்பட்ட நார்களில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவத் துவங்கியது. வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.