/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம் விவசாயிகள் கவலை வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம் விவசாயிகள் கவலை
வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம் விவசாயிகள் கவலை
வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம் விவசாயிகள் கவலை
வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 21, 2024 03:55 AM

சிவகாசி: கொளுத்தும் வெயிலால் வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து விவசாயிகள் கவலையில் உள்ளனர். அடுத்த பருவ மழை பெய்து அணைக்கு தண்ணீர் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி வெம்பக்கோட்டையில் வைப்பாறு அணை 1986 ல் கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது.
வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டேர் பாசன வசதி உடையது. அணையிலிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணையை சற்றியுள்ள கிராம பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடைபெறுகிறது. வெம்பக்கோட்டை அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து காயல்குடி, நிசப, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது.
2023 இறுதியில் தொடர் மழை பெய்ததில் அணை முழுமையாக நிறைந்தது. தொடர்ந்து கோடை காலம் துவங்கிய நிலையில் 23 அடி உயரம் உள்ள அணையில் மார்ச் 10 ல் 20 அடி உயரம் வரை தண்ணீர் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அடுத்தடுத்து வெயில் கொளுத்தியதால் நான்கடி குறைந்து 16 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.
அதே சமயத்தில் கோடை மழை பெய்ய துவங்கியதுமே அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்தது. மழை முடிந்து தொடர்ந்து கொளுத்தி வருவதால் தண்ணீர் மட்டம் தற்போது 15 அடியாக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே பருவ மழை பெய்து அணைக்கு தண்ணீர் வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.