ADDED : ஜூலை 28, 2024 04:26 AM

விருதுநகர் : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தி.மு.க., சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததாக மத்திய அரசை கண்டித்து எம்.பி., கிரிராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ., க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், நகராட்சித் தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பாராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.