ADDED : ஜூன் 26, 2024 07:41 AM

விருதுநகர் : கள்ளச்சாராய மரணங்களை தடுக்காத தி.மு.க., அரசை கண்டித்தும், மது விலக்கு கோரியும் விருதுநகரில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர் காஜா ஷெரீப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர்பாண்டி தலைமை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திரநாத் பேசினார்.
நகரச்செயலாளர் ஏங்கல்ஸ், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜூ பங்கேற்றனர்.