/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்; மக்கள் தவிப்பு பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்; மக்கள் தவிப்பு
பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்; மக்கள் தவிப்பு
பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்; மக்கள் தவிப்பு
பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்; மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:43 AM

சிவகாசி: திருத்தங்கல் கவிதா நகரில் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத சமுதாய கூடத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தங்கல் கவிதா நகரில் அதிக அளவில் பட்டாசு, அச்சு, கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டு திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்துவதற்கு மண்டபம் இல்லாமல் சிரமப்பட்டனர். எனவே எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் நிறைந்துள்ளது.
தவிர சமூகவிரோதிகளின் கூடாரமும் மாறி வருகின்றது. இதனால் இப்பகுதியினர் அதிக வாடகை கொடுத்து தனியார் மண்டபங்களில் விசேஷங்களை நடத்த சிரமப்படுகின்றனர். கட்டடம் சேதமடைந்து பயனற்றதாக மாறி விடுவதற்கு முன் மின்சாரம்,தண்ணீர் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.