/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 23, 2024 03:17 AM
விருதுநகர்: விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 42 மாற்றுத்திறனாளிகள் பணிநியமனம் பெற்றனர். 2ம் கட்டத் தேர்வுக்கு 17 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,ல் நேற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு 45 நிறுவனங்கள் பங்கேற்றன. 357 வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில் 42 பேர் பணிநியமனம் பெற்றனர். 17 பேர் 2ம் கட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர். பொதுப் பயனாளிகள் 38 பேர் பணிநியமனம் பெற்றனர். 17 மாற்றுத்திறனாளிகள் திறன் பயிற்சி வேண்டி பதிவு செய்தனர்.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள், கைக்கடிகாரம், வங்கிக்கடன் மானியம் , காதொலி கருவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானபிரபா, ஐ.டி.ஐ., முதல்வர் செல்லக்கனி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.