ADDED : ஆக 04, 2024 06:21 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவதூறாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துாரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை, மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்து பேசினர். நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.