ADDED : ஜூலை 20, 2024 12:11 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை உழவர் மையத்தில் பி.ஜி.எஸ்., அங்ககச் சான்றழிப்பு பற்றிய நடைமுறைகள் என்ற தலைப்பில் பயிற்சி நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தலைமை வகித்தார். துணை இயக்குனர் நாச்சியார் சிறப்புரை ஆற்றினார்.
உதவி இயக்குனர் பத்மாவதி, வேளாண் அலுவலர் துர்காதேவி, பேராசிரியர் வேணுத்தேவன், மண் பரிசோதனை நிலைய அலுவலர் முருகேசன், பேசினர்.
விவசாயி அசோக்குமார் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்,மீன் அமிலம் பயன்பாடு பற்றி கூறினார். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் பெருமாள்சாமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் செய்தனர்.