ADDED : ஆக 06, 2024 04:20 AM
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., செஞ்சுருள் சங்கம், விருதுநகர் விடியல் அரிமா சங்கம், ஊஞ்சா தனசாமி - பரிமளா தேவி மருத்துவ அறக்கட்டளை, ஜே.சி.ஐ., சார்பில் ரத்ததான முகாம் கல்லுாரி தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 92 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் ரவி, மோகன் ராஜ், மாரீஸ்வரி, பேராசிரியர்கள் செய்தனர்.