Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு ஆசி

முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு ஆசி

முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு ஆசி

முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு ஆசி

ADDED : ஜூன் 16, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வரலொட்டி சோனை முத்தையா கோயிலில் வைகாசி திருவிழாவில் முள் படுக்கையில் படுத்து பக்தர்ளுக்கு சாமியாடி ராமர் ஆசி வழங்கினார்.

காரியாபட்டி வரலொட்டியில் சோனை முத்தையா, கலுவடையான் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. புல்லலக் கோட்டை பவுச்சியம்மன் கோயிலில் அக்கிராமத்தினர் வழிபாடு செய்து, பின் சோனை சுவாமிக்கு பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து சாமி ஆட்டத்துடன் பெட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர். முக்கிய நிகழ்ச்சியாக காரியாபட்டியை சேர்ந்த சாமியாடி ராமர் முள்படுக்கையில் படுத்து வழிபாடு செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us