ADDED : ஜூலை 15, 2024 04:11 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் நுண்ணீர் பாசனம் பயிர் சாகுபடி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தோட்டக்கலை துறை சார்பில் குறிஞ்சாக்குளத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி தலைமை வகித்தார்.
நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யவும் விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியங்கா பேசினார். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர் விமல்ராஜ் செய்தார்.