ADDED : ஜூலை 05, 2024 11:11 PM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 283 தகுதி வாய்ந்த நீர் நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் கட்டணமில்லாமல் எடுக்க அனுமதி வேண்டி tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து சம்மந்தப்பட்ட தாசில்தார் அளவிலேயே ஆன்லைனில் அனுமதி பெற்று பயன்பெறலாம், என்றார்.