Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 13, 2024 05:12 AM


Google News
விருதுநகர்: விருதுநகர், திருச்சுழியைச் சேர்ந்தவர்கள் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையம், சிட்டிசன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் விருதுநகர், திருச்சுழி பகுதிகளில் நத்தம் ஆவணங்கள் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை மக்கள் இ- சேவை மையம், சிட்டிசன் போர்ட்டல் (https://eservices.tn.gov.in/citizen) விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியில் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும்.

மேலும் கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த இருபகுதிகளிலும் இ- சேவை மையம், சிட்டிசன் போர்ட்டல் மூலம் மட்டுமே நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

இந்த இணைய தளம், தமிழ்நிலம்' செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us