ADDED : ஜூலை 21, 2024 04:17 AM
ராஜபாளையம்; ராஜபாளையம் முடங்கியார் ரோடு சித்தி விநாயகர் கோயிலில் வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கம் சார்பில் ஆடி மாத பூஜை விசேஷ அலங்காரம் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு உற்ஸவர் ஐயப்பசுவாமிக்கு அஷ்டாபிசேகங்களை தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
சின்ன சுரைக்காய் பட்டி, நாயுடு தெரு, சம்பந்தபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கம் சார்பில் சுகுமார் செய்திருந்தார்.