Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் அபாய சங்கிலி இழுப்பு ஸ்ரீவி.,யில் 20 நிமிடம் தாமதம்

ரயிலில் அபாய சங்கிலி இழுப்பு ஸ்ரீவி.,யில் 20 நிமிடம் தாமதம்

ரயிலில் அபாய சங்கிலி இழுப்பு ஸ்ரீவி.,யில் 20 நிமிடம் தாமதம்

ரயிலில் அபாய சங்கிலி இழுப்பு ஸ்ரீவி.,யில் 20 நிமிடம் தாமதம்

ADDED : ஜூன் 20, 2024 02:05 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர்:பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 8:40மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 5:40 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த பயணி ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ரயிலின் கார்டு, சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பயணி 'தான் வேண்டுமென்று அபாய சங்கிலியை இழுக்கவில்லை. தெரியாமல் தனது கைபட்டதால் அது இயங்கியதாக 'தெரிவித்தார்.

இதனால் 20 நிமிடம் தாமதமாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us