பயன்படாத அரசு கட்டடங்கள்
நாகேந்திரன், விவசாயி: சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பராமரிப்பின்றி சேதமடைந்து விட்டது. இதேபோன்று 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி பொது கழிப்பறையும் பயன்பாடு இன்றி உள்ளது. அரசு மூலம் கட்டப்படும் கட்டடங்களை முறையான பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
வாறுகால் வசதி
பாண்டியன், விவசாயி: ஊராட்சி அலுவலகம் உள்ள இடத்திற்கு நடுவே கழிவுநீர் வாறுகால் மற்றும்நீர் பிடிப்பு இடங்கள் உள்ளது. இவற்றை பராமரிக்காததால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போய்விட்டது.
மைதானம் வேண்டும்
நிதிஷ்குமார், மாணவர்: எங்கள் ஊர் மாணவர்கள் பாரம்பரியமாக கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தனியாக குழு அமைத்து மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளனர். எங்கள் ஊரில் கால்பந்து மைதானம் அமைத்து தர அரசு முன் வர வேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த வேண்டும்.