Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சூப்பர் ரிப்போர்டர் :

சூப்பர் ரிப்போர்டர் :

சூப்பர் ரிப்போர்டர் :

சூப்பர் ரிப்போர்டர் :

ADDED : ஜூலை 05, 2024 04:17 AM


Google News
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் நெசவாளர் காலனி மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும்எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நெசவாளர் இக்காலனியில் 20க்கும் மேற்பட்ட தெருக்கள், குறுக்கு தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதி முழுவதும் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதி உருவாகி25 ஆண்டுகள் ஆன போதிலும் எந்த வித அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

முக்கியமான குடிநீர், ரோடு, வாறுகால் வசதிகள் இல்லை. பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிற பகுதிகளுக்கு வரும் தாமிரபரணி குடிநீர் நெசவாளர்காலனிக்கு வருவது இல்லை. ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் வருகிறது. அதுவும் உப்பு சுவையுடன் இருப்பதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.

குடிநீரை ஒரு குடம் 12 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். தெருக்களில் வாறுகால்கள் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவில் ஓடுகிறது ஆங்காங்கு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேட்டையும், நோயையும் ஏற்படுத்துகிறது. குப்பையை அள்ள வருவதில்லை.

தெருவின் கடைசி பகுதியில் குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. பன்றிகள் காலனியில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அத்துடன் பாம்புகள் அதிக அளவில் உள்ளது.

ஊராட்சி மூலம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாமல் உள்ளது. கழிப்பறை இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். காலனிக்கு என குளியல் தொட்டி, பொதுகழிப்பறை கட்டப்பட வேண்டும்.

பாலையம்பட்டி ஊராட்சி நிர்வாகம் நெசவாளர் காலனியில் தேவையான அடிப்படை செய்து தருவதில் மெத்தனம் காட்டுவதாகவும், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதில்லை என்பது இப்பகுதி மக்களின் புகாராக உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை


நாராயணமூர்த்தி, நெசவாளர்: நாங்கள் நெசவாளர் காலனியில் குடி வந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், வாறுகால், ரோடு அமைத்து தர பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்துள்ளோம். ஊராட்சியில் மெத்தனமாக உள்ளனர். இந்தப் பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்து தர வேண்டும்.

குடிநீர் இல்லை


சுப்புலட்சுமி, குடும்பதலைவி: எங்கள் நெசவாளர் காலனிக்கு மட்டும் ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் வருவது இல்லை. அருகில் உள்ள ராமலிங்கா நகர் பகுதிக்குசென்று தான் குடிநீரை எடுத்து வர வேண்டி உள்ளது. மேலும் வெளியிடத்தில்தான் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். நாங்கள் உழைத்து பெறும் கூலி குடிநீருக்கே பாதி செலவு ஆகி விடுகிறது.

கிடங்கான தெருக்கள்


சாந்தி, குடும்ப தலைவி: காலனியில் உள்ள தெருக்கள் அனைத்தும் கற்கள் பெயர்ந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. குழாய்கள் பதிப்பதற்காக ரோட்டை தோண்டி கிடங்காக மாற்றி விட்டனர். வாறுகால் இல்லாமல் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நடக்க முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருக்கிறது. வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

நிதியில்லை


முத்துலட்சுமி, ஊராட்சி தலைவர், பாலையம்பட்டி: புளியம்பட்டி நெசவாளர்காலனியில் வளர்ச்சி பணிகள் செய்ய ஊராட்சியில் நிதி இல்லை. அரசு நிதி ஒதுக்கினால் வளர்ச்சி பணிகள் செய்யப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us