பிரச்சனை
முத்தரையர் நகர் வழியாக செல்லும் அணுகு சாலையில் வாகனங்கள் செல்லாமல் தொடர்ந்து பாலையம்பட்டி பஜார் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
தீர்வு
முத்தரையர் நகர் அணுகு சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நின்று கனரக வாகனங்களை இந்த ரோட்டில் செல்ல அறிவுறுத்த வேண்டும். பஜார் வழியாக கனரக வாகனங்களில் செல்ல அனுமதிக்க கூடாது.
நிதி வீண்
கந்தசாமி, சமூக ஆர்வலர்: பாலையம்பட்டி முத்தரையர் நகர் செல்லும் அணுகு சாலையை ஊருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போடப்பட்டது. இதில் வாகனங்கள் செல்லாததால் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தும் ரோடு வீணாக கிடக்கிறது. வாகனங்கள் அணுகு சாலை வழியாக செல்ல போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிவைடரை அகற்ற வேண்டும்
கண்ணன், தொழிலாளி: மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் இருந்து அருப்புக்கோட்டை முத்திரையர் நகர் அணுகு சாலையில் செல்வதற்கு, நான்குவழி சாலையில் இருக்கும் டிவைடர்களை அகற்றி அங்கு ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும். இதனால் மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்து வாகனங்கள் அணுகுச்சாலையை பயன்படுத்த வசதியாக இருக்கும்.