/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு: 2 பேர் பேர் கைது வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு: 2 பேர் பேர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு: 2 பேர் பேர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு: 2 பேர் பேர் கைது
வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு: 2 பேர் பேர் கைது
ADDED : ஜூலை 03, 2025 12:50 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற, வாலிபரை கத்தியால் வெட்டி தங்க செயின், வெள்ளி நகையை
பறித்து சென்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, மதகடிப்பட்டு அடுத்த கலித்தாத்தாள்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் கவுதம் 27; இவர் கடந்த 29ம் தேதி இரவு தனது பைக்கில், வீட்டில் இருந்து திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டில் உள்ள தனது நண்பர் ராம்குமாரை பார்ப்பதற்காக சென்றார்.
இரவு 7:30 மணிக்கு, அவர் தமிழக பகுதியான சித்தலம்பட்டு மீன் மார்க்கெட் வழியே செட்டிப்பட்டு நோக்கிச் சென்றார்.
அந்த பகுதி ஏரிக்கரை சாலையில் சென்றபோது, முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள், 2 பேர் திடீரென அவரது பைக்கை வழிமறித்தனர்.
அவரை கத்தியால் வெட்டி அவர் அணிந்திருந்த 1 சவரன் செயின், வெள்ளி குருமாத் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றனர்.
தொடர்ந்து படுகாயம் அடைந்த கவுதம் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமயில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
திருக்கனுாரை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி இந்த வழக்கில் புதுச்சேரி துத்திப்பட்டு மாதாகோயில் வீதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயக்குமார் 28; மற்றும் புதுச்சேரி உழவர்கரை புதுநகர் விவேகானந்தா வீதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெயபிரதாப் 28; ஆகிய இருவரையும் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.