Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

ADDED : செப் 07, 2025 11:02 PM


Google News
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நடந்து சென்றவர் மீது மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.

அமாவாசைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சபரிநாதன், 26; இவர் கடந்த மாதம் 28ம் தேதி இரவு 7:00 மணியளவில் திருக்கோவிலுார்- மடப்பட்டு சாலையில் பைக்கில் சென்றார். அப்போது நிலை தடுமாறி முன்னாள் நடந்து சென்ற நபர் மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சபரிநாதன் இரு தினங்களுக்கு முன் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us