/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு பஸ், கார் இடையில் சிக்கிய பைக் திண்டிவனம் அருகே வாலிபர் பலி அரசு பஸ், கார் இடையில் சிக்கிய பைக் திண்டிவனம் அருகே வாலிபர் பலி
அரசு பஸ், கார் இடையில் சிக்கிய பைக் திண்டிவனம் அருகே வாலிபர் பலி
அரசு பஸ், கார் இடையில் சிக்கிய பைக் திண்டிவனம் அருகே வாலிபர் பலி
அரசு பஸ், கார் இடையில் சிக்கிய பைக் திண்டிவனம் அருகே வாலிபர் பலி
ADDED : ஜூன் 07, 2025 10:24 PM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற வாலிபர் காரை முந்திச் செல்ல முயன்றபோது, அரசு பஸ் - காருக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை தணியல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீன்குமார், 20; சென்னையில் ஓட்டல் மாஸ்டர். சொந்த ஊருக்கு வந்த பிரவீன்குமார், நேற்று காலை 11:00 மணிக்கு, திண்டிவனத்தில் இருந்து வெள்ளிமேடுப்பேட்டை நோக்கி யமாகா ஆர்.15 என்ற பைக்கில் சென்றார்.
பட்டணம் சந்திப்பு அருகே காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது, எதிர் திசையில் திண்டிவனம் நோக்கி அரசு பஸ் வந்தது. பிரவீன்குமார் ஓட்டிச் சென்ற பைக் அரசு பஸ் மற்றும் காரின் இடையில் சிக்கி கொண்டது. இரு வாகனங்கள் பக்கவாட்டில் சிக்கியதால் பிரவீன்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
ரோஷணை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.