Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

ADDED : ஜூன் 03, 2025 12:14 AM


Google News
செஞ்சி: காதலை துண்டித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த வேளாமை கிராம் யாசகம் மனைவி கல்யாணி, 45; இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பட்டதாரியான இவரது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரமேஷ், 27; என்பவரை காதலித்து வந்தார்.

ரமேஷின் நடத்தை சரியில்லாததால், அவருடன் பேசுவதை கல்யாணி மகள் நிறுத்தி விட்டார். வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது.

இதனால் ஆத்திரமான ரமேஷ் தனது தந்தை ஏழுமலை, தாய் சிவகாமியுடன் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, கல்யாணியின் வீட்டிற்கு சென்று கல்யாணி, அவரது மகள், மகன், மருமகள் ஆகியோரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us