ADDED : ஜூன் 29, 2025 11:15 PM

திண்டிவனம்: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து பைக்கில் வந்த பிரம்மதேசம் அருகே உள்ள டி.நல்லாளம் கிராமத்தை சேர்ந்த நித்தீஷ்குமார், 23; என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அவரது பைக்கில் 50 மதுபாட்டில் கடத்தி வருவது தெரியவந்தது. போலீசார் நித்தீஷ்குமாரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.