ADDED : ஜூன் 25, 2025 01:07 AM
செஞ்சி : செஞ்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் உலக யோகா தின நிகழ்ச்சி நடந்தது.
சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர் கமலக்கண்ணன் வரவேற்றார். சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ்பாபு யோகாசன பயிற்சியளித்தார். டாக்டர்கள் பாலகோபால், ராஜலட்சுமி, சுமதி, செவிலியர் மேற்பார்வையாளர் ஆதிலட்சுமி, மருந்தாளுநர் ஸ்ரீதர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.