Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

ADDED : செப் 04, 2025 02:30 AM


Google News
மயிலம்: மயிலம் அருகே கொரளூரை சேர்ந்தவர் வீரப்பன், 44; இவருடைய நண்பர் வெங்கடேசன், 43; கூலித்தொழிலாளர்கள்.

இருவரும் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு, பைக்கில், திண்டிவனம் நோக்கி சென்றனர். பைக்கை வீரப்பன் ஓட்டி சென்றார். கூட்டேரிப்பட்டு அடுத்த கன்னிகாபுரம் அருகே செல்லும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற வெங்கடேசன் 43; என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீரப்பனுக்கு கால் முறிவு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us