Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு மருத்துவக் கல்லுாரியில் காத்திருப்போர் கூடம் திறப்பு

அரசு மருத்துவக் கல்லுாரியில் காத்திருப்போர் கூடம் திறப்பு

அரசு மருத்துவக் கல்லுாரியில் காத்திருப்போர் கூடம் திறப்பு

அரசு மருத்துவக் கல்லுாரியில் காத்திருப்போர் கூடம் திறப்பு

ADDED : ஜூன் 10, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக கட்டிய காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில், 2024--25 ஆம் ஆண்டு எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கினார். ஆர். எம். ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்குமார், மகப்பேறு துறை தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஏ.ஆர். எம். ஓ. வெங்கடேசன் வரவேற்றார்.

விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் காத்திருப்போர் கூடத்தை திறந்து வைத்து பேசினார். சி.எம்.ஓ., டாக்டர் ராஜி, வி.சி.க., மாவட்ட செயலாளர் பெரியார், திலீபன், ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன், கிட்டு, ஜெயச்சந்திரன், சங்கத் தமிழன், நகரச் செயலாளர் சந்துரு, அனைத்து துறை பேராசிரியர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us