ADDED : ஜூன் 09, 2025 04:33 AM
திண்டிவனம்; திண்டிவனத்தில் வி.சி., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மைய மாவட்ட வி.சி., கட்சி ஆலோனை கூட்டம், செஞ்சி ரோட்டிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் விஸ்வதாஸ் வரவேற்றார். மக்கள் திரள் பேரணி ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நசீர் அகமது, ஜப்பார், பழனி பேசினர்.
நிர்வாகிகள் ராஜேந்திரன், கண்ணன், ஈஸ்வரி, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.