Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அழுகிய நிலையில் ஆண் சடலம் வானுார் போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் ஆண் சடலம் வானுார் போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் ஆண் சடலம் வானுார் போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் ஆண் சடலம் வானுார் போலீசார் விசாரணை

ADDED : ஜூன் 08, 2025 10:23 PM


Google News
வானுார்: வானுார் அருகே ஆலமரத்தில் அழுகிய நிலையில் துாக்கில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானுார் அடுத்த ரங்கநாதபுரம் ரகு என்பவரின் விவசாய நிலத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஆலமரத்தில் அழுகிய நிலையில் துாக்கில் தொங்குவதாக வானுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. துாக்கில் தொங்கிய நபரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அடித்து கொலை செய்து துாக்கில் தொங்க விட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us