/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானச ஜெயந்தி விழா வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானச ஜெயந்தி விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானச ஜெயந்தி விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானச ஜெயந்தி விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானச ஜெயந்தி விழா
ADDED : செப் 16, 2025 07:26 AM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த வைகானச ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு தொடங்கி மூலவர், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.