Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ADDED : ஜன 12, 2024 12:05 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், ஜானகிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திகேயன், 25; சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார்.

இவர், கடந்த சில தினங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் மன நிலை பாதித்தது போல் இருந்தவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஜானகிபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டருகே சென்னை மார்க்கமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us