/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலைரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
ADDED : ஜன 12, 2024 12:05 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், ஜானகிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திகேயன், 25; சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார்.
இவர், கடந்த சில தினங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் மன நிலை பாதித்தது போல் இருந்தவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஜானகிபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டருகே சென்னை மார்க்கமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.