Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை

பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை

பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை

பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை

ADDED : மே 25, 2025 05:15 AM


Google News
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவலுார்பேட்டை அடுத்த நந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 56; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 10ம் தேதி வலி தாங்க முடியாமல், விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜெயராமன் இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us