Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கார் மோதி மாணவி பலி

கார் மோதி மாணவி பலி

கார் மோதி மாணவி பலி

கார் மோதி மாணவி பலி

ADDED : மார் 22, 2025 08:57 PM


Google News
அவலுார்பேட்டை : வளத்தி அருகே கார் மோதி நடந்த சென்ற பள்ளி மாணவி இறந்தார்.

வளத்தி அடுத்த சண்டிசாட்சி, தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 51; இவரது மகள் தீபிகா, 12; அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், நீலாம்பூண்டியில் செஞ்சி - சேத்பட் சாலையில் நேற்று காலை 6:30, மணிக்கு , கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது சேத்பட் வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் தீபிகாவின் பின்னால் மோதியதில், தலையில் படுகாயமடைந்த தீபிகா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us