ADDED : ஜூன் 07, 2025 01:37 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட அனைத்து துறை பொதுத்தகவல் அலுவலர்களிடம், தங்களின் துறை சார்பில் பெற்றுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். மனுக்களுக்கு தகவல்கள் வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.