/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : செப் 13, 2025 06:59 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,சையது முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ. ,நாராயணன் வரவேற்றார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் ஆகியோர் முகாமினை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பொன்னங்குப்பம், கொட்டியம் பூண்டி, உலகலாம்பூண்டி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல்முருகன், தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் சுந்தர்ராஜன், பாபு, வசந்தி, கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் நதியா.
ஒன்றிய செயலாளர் ஜெயபால், தலைவர் முரளி, மாவட்ட தலைவர் அருள்மொழி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், அருணாசலம், ரவிச்சந்திரன் ஏகாம்பரம், முனுசாமி ,ஒன்றிய இளைஞரணி பாலகிருஷ்ணன்.
பொருளாளர் முரளி, மாவட்ட பிரிதிநிதிகள் அசோக், சுதாகர், சங்கர், ராம்குமார், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், ஊராட்சி தலைவர்கள் வீரப்பன், விசாலாட்சி வேலு, தாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்னர்.