Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ., அரசு மரியாதையுடன் உடல் தகனம்

விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ., அரசு மரியாதையுடன் உடல் தகனம்

விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ., அரசு மரியாதையுடன் உடல் தகனம்

விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ., அரசு மரியாதையுடன் உடல் தகனம்

ADDED : மார் 26, 2025 04:01 AM


Google News
விழுப்புரம் விழுப்புரத்தில் விபத்தில் இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

விழுப்புரம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம், 58; சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 13ம் தேதி பைக்கில் பணிக்கு சென்றபோது, விபத்தில் சிக்கி காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். இவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

பின், அவரது உடல் விழுப்புரம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், எஸ்.பி., சரவணன் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us