Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு

செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு

செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு

செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு

ADDED : ஜூன் 09, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
செஞ்சி : கோயம்புத்துார் காமாட்சிபுரி ஆதீனம் செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் நடந்து வரும் ராஜ கோபுரம் கட்டும் பணியை பார்வையிட்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகின்றது.

இப்பணிகளை கோயம்புத்துார் காமாட்சிபுரி ஆதினம் 51வது சக்தி பீடம், 2ம் குரு மகா சன்னிதானம் பஞ்சலிங்கேஸ்வரர் பார்வையிட்டார். பின்னர் கோவில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பக்தர்களுக்கு அருளாசியும், பிரசாதம் வழங்கினார். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு திருமுருகன் அடிகளார் முன்னிலை வகித்தார். வேலுார் தொழில் அதிபர் ராஜா, பா.ஜ., மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை மற்றும் குணசேகர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us