ADDED : செப் 18, 2025 03:48 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், நேற்று சமூக நீதி நாளையொட்டி, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, டி.ஆர்.ஓ., அரிதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் முகுந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.