ADDED : செப் 04, 2025 06:56 AM

திண்டிவனம் : திண்டிவனம் ஆக்ருதிப் பள்ளியின் 13ம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது.
கருவம்பாக்கத்திலுள்ள ஸ்ரீ தரம் சந்த் ஜெயின் பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் பப்லாசா தலைமை தாங்கினார்.
செஞ்சி வட்ட நீதிபதி திவ்யா சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில், பள்ளி செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன் குமார், இயக்குனர் அனுராக், முதல்வர் சாந்தி, ஆக்ருதி பள்ளி முதல்வர் ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.