Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

ADDED : ஜூலை 04, 2025 01:59 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அவ்வழியே வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு, டிரைவர் தப்பி சென்றார்.

லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, மணல் கடத்திய விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us