Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போலி நகை அடகு: சேலம் பெண் கைது

போலி நகை அடகு: சேலம் பெண் கைது

போலி நகை அடகு: சேலம் பெண் கைது

போலி நகை அடகு: சேலம் பெண் கைது

ADDED : மார் 20, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே போலி நகை அடகு வைக்க வந்த சேலம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மடப்பட்டு அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 35; திருவெண்ணெய்நல்லுார் அருகே பெரியசெவலையில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று கடைக்கு வந்த 55 வயது பெண், தான் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், 2 கிராம் மோதிரத்தை அடகு வைத்துக்கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, ராஜிவ்காந்தி மோதிரத்தை வாங்கி பார்த்தபோது, போலி நகை என்பது தெரிந்தது.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணிடம் விசாரித்தனர். அதில் சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தை சேர்ந்த கணேசன் மனைவி நிர்மலா, 55; என்பதும், போலி நகையை அடகு வைக்க முயன்றதும் தெரிந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us