Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

கல் விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி ஆர்.டி.ஓ., வழங்கல்

ADDED : மார் 28, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பாறைக்கு வெடி வைத்தபோது சிதறி தலையில் கல்விழுந்து இறந்த சிறுமியின் பெற்றோரிடம் அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை ஆர்.டி.ஓ., வழங்கினார்.

விக்கிரவாண்டி அடுத்த டி.கொசப்பாளையத்தைச் சேர்ந்த சிறுமி காயத்ரி, 10; கடந்த 23ம் தேதி பாறைக்கு வெடி வைத்தபோது சிதறிய கல் சிறுமியின் விழுந்து இறந்தார்.

இவரது பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், சிறுமி காயத்ரி வீட்டிற்கு நேரில் சென்று 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தாய் முத்துலட்சுமியிடம் வழங்கினார்.

தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., பிரேமா உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us