Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு 

ADDED : செப் 22, 2025 02:49 AM


Google News
திண்டிவனம்: பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் நேரு வீதியில் பேக்கரி (கேக் கார்னர்) கடை வைத்திருப்பவர் சென்னையை சேர்ந்த முர்ஷித், 35; இவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வழக்கம் போல, கடையை மூடிவிட்டு சென்றனர்.

நேற்று அதிகாலை 3:45 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் அந்த கடையின் ஷட்டரை திறந்து உள்ள சென்றுள்ளார். உள்ளே கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை திருடிக்கொண்டு, ஷட்டரை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

நேற்று காலை 9:00 மணியளவில் கடை ஊழியர்கள் பார்த்த போது ரூ.30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முர்ஷித் கொடுத்துள்ள புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us