ADDED : மே 10, 2025 12:44 AM
விழுப்புரம்: விழுப்புரம் டிராபிக் போலீசார் மற்றும் இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நான்குமுனை சந்திப்பில், டிராபிக் சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன் மற்றும் டாக்டர்கள் திருமாவளவன், அருள்ராஜ் ஆகியோர் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு செய்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.
தொடர்ந்து, ெஹல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிந்து வாகனம் இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட உறுதிமொழி எடுத்தனர்.