Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் மீட்பு

ADDED : மார் 18, 2025 04:52 AM


Google News
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் கிணற்றில் விழுந்த நபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அவலுார்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது வீட்டின் கிணற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30, மணியளவில் அந்த வழியாக குடிபோதையில் வந்த நபர் தவறி கிணற்றில் விழுந்தார்.

தகவல் அறிந்த மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவரை மீட்டனர்.

விசாரணையில் கிணற்றில் விழுந்த நபர் வேலுார், சதுப்பேரியைச் சேர்ந்த ராஜேந்திரன், 58; என்பதும், அவலுார் பேட்டையில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

உடன் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us