/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
நுாற்றாண்டு விழா கண்ட கொட்டியாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 12:20 AM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், கொட்டியாம்பூண்டி கிராமத்தில், வயல்வெளிகள் சூழலில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி. இப்பள்ளி கடந்த 1923ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி துவங்கப்பட்டது.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 73 மாணவியர்கள் உட்பட 127 பேர் படிக்கின்றனர். தற்போது தலைமை ஆசிரியர் பதவி காலியிடமாக உள்ளது. 3 பட்டதாரி ஆசிரியர்கள், 3 இடைநிலை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஒரு ஆங்கில ஆசிரியை என 7 பேர் பணிபுரிகின்றனர்.
பள்ளியில் 10 கம்ப்யூட்டர்களுடன் கணினி அறை உருவாக்கபட உள்ளது. இதனால் மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி பெறலாம். ஸ்மார்ட் 'டிவி'யுடன் கூடிய மூன்று வகுப்பறைகள் உள்ளது.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கிராம மக்கள் பிளாஸ்டிக் சேர், டேபிள் வழங்கியுள்ளனர். ஆங்கில ஆசிரியை அகல்யாவின் ஆங்கில புலமை காரணமாக ஒன்றியத்தில் மற்ற பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை நடத்துவது பெருமைக்குரிய செய்தியாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் நுாற்றாண்டு விழா கொண்டாடிய போது, கிராம மக்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் 'டிவி', கணினி உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக டி.இ.ஓ., அருள் செல்வியிடம் வழங்கினர்.
மேலும், பள்ளி நுழைவு வாயில் அருகே திருவள்ளுவர் சிலை அமைத்து கொடுத்துள்ளனர்.
பள்ளியில், மாணவிகளின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலையாக சிலம்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்கு முன் மாணவர்களுக்கு எளிய யோகா பயிற்சி, தியானமும் கற்றுத்தருகின்றனர். மாலை வேளைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் நடத்துகின்றனர்.
பள்ளியில் அடிப்படை கற்றல் திறன் அதிகரிக்கும் காரணத்தால், 8ம் வகுப்பு முடித்து அருகில் உள்ள உயர் நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் அப்பள்ளிகளில் முதலிடத்தை பிடித்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
அவ்வாறு முதலிடம் பிடிக்கும் மாணவர்களை நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து கவுரவப்படுத்தி பரிசு வழங்குகின்றனர்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு அரசு பணிகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், அரசு பணி செய்து ஓய்வு பெற்று தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் ராமலிங்கம் என்பவர் பள்ளிக்காக 0.30 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் ஒரு லட்சம் ரூபாய் முன் வைப்பு தொகையை செலுத்தியுள்ளனர். ஆனால், 18 ஆண்டுகளாக பள்ளியின் தரத்தை உயர்த்தி அரசு அறிவிக்காதது கிராம மக்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
-ராமலிங்கம், முன்னாள் மாணவர், தொழிலதிபர். சிங்கப்பூர்.
-பாக்கியராஜ், தாசில்தார், பள்ளியின் முன்னாள் மாணவர்.
- ஆனந்தன், கணக்கு அலுவலர், முன்னாள் மாணவர்.
-கார்த்தி, முன்னாள் மாணவர், விவசாயி
-ஆனந்தமூர்த்தி, பட்டதாரி கணித ஆசிரியர்.
-வாசு, முன்னாள் ஊராட்சி தலைவர், விவசாயி.