/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு உறவினர்கள் மறியல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு உறவினர்கள் மறியல்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு உறவினர்கள் மறியல்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு உறவினர்கள் மறியல்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு உறவினர்கள் மறியல்
ADDED : மார் 23, 2025 03:56 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இறந்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் பாண்டியராஜன், 34; இவருக்கு இருதயம், சிறுநீரக பிரச்னையால் கடந்த 18ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்ததால், நேற்று பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். பகல் 12:00 மணிக்கு குடும்பத்தினர் கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடன், அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற நிலையில், சில நிமிடங்களில் பாண்டியராஜன் இறந்துள்ளார். உடலை தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கொண்டு வந்து வைத்துள்ளனர்.
பாண்டியராஜன் இறந்த தகவலை குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல், வெளியே கொண்டு வந்து வைத்ததாக கூறி, மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனையின் கண்ணாடிகளை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து, மதியம் 2:20 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., சரவணன் மற்றும் விழுப்புரம் மேற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் பாண்டியராஜன் எப்படி இறந்தார் என்ற காரணம் தெரியவரும். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., கூறியதை ஏற்று 2:45 மணிக்கு கலைந்து சென்றனர்.