Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

ரேஷன் கடை விற்பனையாளர் மாயம்

ADDED : செப் 01, 2025 01:18 AM


Google News
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது.

திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தை சேர்ந்த மாங்காளி மகன் சுப்ரமணியன்,45; மேல்பாக்கம் கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் சாத்தனுார் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 27ம் தேதி காலை 7:00 மணியளவில் வீட்டில் இருந்து, திண்டிவனம் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us