/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தமிழ் வளர்ச்சி துறை போட்டி மாணவர்களுக்கு பரிசு தமிழ் வளர்ச்சி துறை போட்டி மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை போட்டி மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை போட்டி மாணவர்களுக்கு பரிசு
தமிழ் வளர்ச்சி துறை போட்டி மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 19, 2025 03:20 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அரசு பணியாளர்களுக்கான இரு நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சியில், தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவ்வை அருள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, மாவட்ட அளவில் அண்ணா துரை, ஈ.வே.ரா., பிறந்த நாளை யொட்டி, மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
இதில், வென்ற 16 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் அளவில் சிறப்பு ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சிவசங்கரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.