Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன் விரோத தகராறு: 8 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு: 8 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு: 8 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு: 8 பேர் மீது வழக்கு

ADDED : செப் 11, 2025 11:27 PM


Google News
உளுந்துார்பேட்டை: முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகன்,55; இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிச்சைக்காரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் இரு குடும்பத்தினருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பு அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் கிளியூர் கிராமத்தை சேர்ந்த சபரி, குமரேசன், ஜானகிராமன், ரேவதி, லோகநாதன், முருகன், கண்ணதாசன், ரபிதா ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், ராஜேந்திரன் மகன் ஜானகிராமன், 26; மாரிமுத்து மகன் லோகநாதன், 45; ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us