Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

ADDED : ஜன 25, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இயங்கி வரும் வானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்த்துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமைதாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி கல்லுாரி மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், துணை சேர்மன் பருவதகீர்த்தனா விநாயகமூர்த்தி, ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், கல்பனா பொன்னி வளவன், மாவட்ட கவுன்சிலர் பிரேமா குப்புசாமி, வானுார் பிடிஓ.,க்கள் கார்த்திகேயன், நடராஜன், விரிவாக்க அலுவலர் ஏகவள்ளி, ஊரக நலத்துறை அலுவலர்கள் புஷ்பகலா, ஊரக உலகரட்சகி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் காந்திமதி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us